Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி ஆணையாளர் சரவணன், நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் குமாரபாளையம் நகர பொறுப்பாளரும், நகர மன்ற தலைவருமான த.விஜய்கண்ணன் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு தனது சொந்த செலவில், புத்தாடை, பட்டாசு, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கோ.வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.